தாராபுரம் அருகே மோளரபட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - நள்ளிரவில் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

மோளரப்பட்டி பகுதிக்கு கொண்டுவரப்படும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் ஒன்றியம் மோளரபட்டி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மோளரபட்டி ஊர் பொதுமக்கள் இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தவர்கள் டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் திடீரென தாராபுரம்-பூளவாடி சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மோளரபட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனோகரன் தெரிவிக்கையில், தேர்பாதை கிராமத்தில் அரசு டாக்ஸ்மார்க் கடை ஏற்கனவே கடை எண் 3830 என்ற பெயரில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள உப்பாறு அணை - தாராபுரம் செல்லும் மெயின் சாலையில் இயங்கி வருகிறது. அங்கு தற்போது நடந்து வரும் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

அதன் பிறகு தேர்பாதை கிராமத்தில் தற்போது செயல்பட்டு வரும் பிரச்சனைக்குரிய டாஸ்மார்க் கடையை மோளரப்பட்டி கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக தனியார் விவசாய நிலத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே டாஸ்மார்க் மேலாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்திருந்தோம்.

மேலும் இங்கு அருகாமையில் கோவில், பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் மோளரப்பட்டி பிரதான சாலையாக உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் விவசாய வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே இங்கு டாஸ்மார்க் கடையை அமைப்பதால் ஊர் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே மோளரப்பட்டி பகுதிக்கு வரும் டாஸ்மார்க் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் இரவு பகலாக பொதுமக்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கட்சி அரசியல்வாதிகள், ஒன்றிய செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் சுய லாபத்திற்காக அதிகாரிகள், துணை போனால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....