தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா - ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை

மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது. ஆட்டுச் சந்தை துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது. இந்தச் சந்தைக்கு மூலனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் ஆட்டுச் சந்தை துவக்க விழா நடைபெற்றது.

மூலனூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 5-மணிக்கு நடைபெறும். மூலனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகள் சந்தை கடந்த 10-வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மூலனூர் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இன்று ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது.



மூலனூர் வாரச்சந்தைக்கு மூலனூர், அண்ணா நகர், பெரமியம், கிலாங்குண்டல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூலனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்டுச்சந்தை துவங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இன்று துவக்க விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...