தாராபுரம் அருகே தேர்பாதை பகுதியில் உள்ள மதுபான கடை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பாதை என்ற இடத்தில் உள்ள மதுபான கடை 38 30 இந்த கடை கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.



தேர் பாதை தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடை போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த பகுதிக்கு வருகை புரிந்த போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருகிறேன் என உத்தரவளித்ததின் பேரில் அப்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர் பாதையில் உள்ள 3830 என்ற மதுபான கடை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் இந்த கடை மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மோளரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று இரவு எங்களது பகுதிக்கு மதுபான கடை வேண்டாம் எனக்கோரி இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து இன்று தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...