பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் புதிய துணைத் தலைவராக திலகவதி தேர்வு

மறைமுக வாக்கெடுப்பில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த வார்டு எண்ணிக்கை ஒன்பது ஆகும். தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேர், அதிமுக சேர்ந்த ஏழு பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.

இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...