உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து - புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் முற்றிலும் குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவு இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதுகுறித்து உடுமலை தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடுமலை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதியில் குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...