தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரதலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் ஐனார்த்தன்ன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரோஜா, மாநில துணைத் தலைவர் காணப்பிரியா(எஸ்சி பிரிவு), தமிழக அரசு இயல் இசை ஆலோசனை குழு உறுப்பினர் கலாராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மாலதி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் அசோக் நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...