ஈஷாவில் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழா - பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்தின் அசத்தல் நடன நிகழ்ச்சி

தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்க்ஷா கலைத்திருவிழாவின், நிறைவு நாளில் பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த் குழுவினர் நிகழ்த்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பார்ப்போரை மெய் சிலிர்க்க செய்தது.

இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மார்ச் 7) தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவரும், அவருடைய குழுவினரும் நந்தி மற்றும் சிம்ஹ கதைகளை தங்கள் எழிலான நடனத்தின் மூலம் மீட்டுருவாக்கினர். இந்த குழுவில் 20 பெண் நடனக் கலைஞர்களும், 3 ஆண் நடனக்கலைஞர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அற்புத நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மூழ்கி திளைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ரசித்தனர்.

இவர் இந்தியாவின் தலைச் சிறந்த நடன கலைஞர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி இரு நடன கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும், சங்கரானந்த கலாஷேத்ரா எனும் புகழ்பெற்ற அமைப்பை கலை இயக்குனராக வழிநடத்தி வருகிறார்.



கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டாக மஹாசிவராத்திரி விழா இன்று மார்ச் 8 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாரதத்தின் பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும், யக்க்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...