கோவை மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது. இந்த பழப்பண்ணையில் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்து வந்தனர். இதனால் குறைந்த பொருட்செலவில் ரம்மியமான, இதமான சூழலை ரசிக்க கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் (மார்ச்.6) அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று ஆர்வத்துடன் கல்லாறு பழப்பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...