கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் பிரதமரின் ஆத்மநிர்பா் நிதி திட்டத்தின்கீழ் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ்கள், மாநகராட்சி பிரதான அலுவலக தனி முகாமில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.

வடக்கு மண்டலத்தில் மார்ச் 7-ஆம் தேதி முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும்.

எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...