பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் NIA கல்வி நிறுவனங்கள் மற்றும் யுவசக்தி மகளிர் நல சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சாந்தாமணி கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தின விழா சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து NIA கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று NIA கல்வி நிறுவனங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...