கோவையில் வரும் 10ஆம் தேதி தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி - மாவட்ட ஆட்சியர் தகவல்

கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி என்ற தலைப்பில், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சரின் திட்டங்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வருகின்ற அன்று (10.03.2024) ஒருவாரத்திற்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களுடன் முதல்வர், மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர்த் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கொண்ட அரங்கமும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாமும் அமைக்கப்படவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வருகின்ற (10.03.2023) அன்று மாலை 6மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்து பார்வையிட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...