வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தின விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர்.



இவ்விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மகளிர்கள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினர்.



தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வால்பாறையில் நீண்ட நாளாக செயல்பட்டு வந்த மக்கும் குப்பை, மக்கா குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.



பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு பிரித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, அதை உரமாக தயாரித்து தமிழக வேளாண் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உரங்களில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து பின்பு 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ, 50 கிலோவாக பேக் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வீதாம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



அதை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் விற்பனை செய்து துவக்கி வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொறியாளர் கோகிலா செந்தில்குமார், வீரபாகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...