உடுமலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - 238 வழக்குகளுக்கு தீர்வு

தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும் ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுக்கா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேசனல் லோக் அதாலத்) நடைபெற்றது. 3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.விஜயகுமார், உடுமலை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



அதன்படி தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 57 ல் 57 வழக்குகள் ரூ. 3 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், இதர சிவில் வழக்கு 25 ல் 11 வழக்குகள் ரூ.3 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 884 க்கும், ஜீவனாம்ச வழக்கு 3 ல் ஒரு வழக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் 840 வழக்குகள் எடுக்கப்பட்டு 238 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 45 லட்சத்து 61 ஆயிரத்து 784 க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...