காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் - பெண் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் நடனமாடி மகிழ்ச்சி

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.



காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கேயம் வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான‌ எஸ்.சந்தான கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் நீதிமன்ற பெண் ஊழியர்கள், பெண் வழக்குகறிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் செயலாளர் எஸ். செல்வகுமார் உட்பட இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 100மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த மகளிர் தினவிழாவில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடனப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்கப் பெற்றனர். மேலும் நீதிபதிகள் பெண்களின் சிறப்புகள் குறித்து அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.



மேலும் பொதுவாழ்க்கையில் பெண்கள் இடையூறுகள் இருந்து எவ்வாறு முன்னேறி வெற்றி அடைவது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் மகளிர் தினவிழாக்கள் நடைபெறுவது பெண்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு ஒரு உந்துகோலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...