தாராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் - 257 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை தொடங்கப்பட்டது. இதில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம்.தர்ம பிரபு தலைமையிலும், ஓய்வுபெற்ற நீதிபதி என்.நாகராஜன், குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு மற்றும் வழக்கறிஞர் எம்பி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் மக்கள் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.



இதில் மோட்டார் வாகன விபத்துக்கள் 36, உரிமையியல் வழக்குகள் 100, குற்றவியல் சிறு வழக்குகள் 100, ஜீவனாம்ச வழக்கு இரண்டு, குடும்ப வன்முறை வழக்கு ஒன்று, விவாகரத்து வழக்கு இரண்டு, காசோலை வழக்கு நான்கு, வங்கி வாரா கடன் வழக்கு 12 என மொத்தம் 257 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் ரூ.20,49,04,141 மேலும் வங்கிக் கடன் வழக்கு 12 இதன் மதிப்பு சுமார் 13,79,000 போன்றவைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டது. இதில் 638 பயனாளிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பணியினை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...