தார் சாலை அமைக்கக்கோரி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தார் சாலை போடாமல் இருப்பதால் மழைக்காலங்களில் முற்றிலுமாக சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.எம்.ஜி, எம்.எஸ், எம்.எம், காலனியில் 48 வீடுகள் கட்டப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.



நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தார் சாலை போடாமல் இருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தார் சாலை போடாமல் இருப்பதால் அன்றாடம் அவ்வழியாக பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்ல அச்சமாக இருப்தாகவும், மழைக்காலங்களில் முற்றிலும் இந்த சாலையை பயன்படுத்தும் முடியாத நிலை இருப்பதால் உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முற்றுகையிட்டு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...