கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை மற்றும் நலத்திட்ட விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி

தேர்தலில் முடிவு எடுப்பதில் பொதுமக்கள் தெளிவாக இருப்பதாகவும், அதில், திமுக வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் விளக்கம் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,



தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டதாகவும், குறிப்பாக இந்த பகுதியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் வந்து செல்வதால் அவர்கள் அனைவரும் தமிழக அரசின் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் அது குறித்தான விளக்கங்கள் அடங்கிய இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதால் தான் இங்கு இந்த கண்காட்சி அரங்க அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வேட்பாளர் குறித்து தலைமையில் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் முடிவு எனவும், அது பேச்சுவார்த்தையில் இருக்கும்போது நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

தேர்தலில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய முடிவில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் எனவும், திமுக தான் சரியாக இருக்கும் அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்குறார்கள், பல கருத்து கணிப்புகள் அதை தான் சொல்கிறது என்றும் அண்ணாமலை சொல்வதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் எல்லோருமே கலைஞர் பெயரை சொல்லி தான் கூட்டணி சார்பில் ஓட்டு கேட்டு கொண்டு இருக்கிறோம் என்றும் இதில் என்ன புதிதாக தவறு கண்டு பிடித்தார் என்று தெரியவில்லை என்றும், இதுவெல்லாம் ஒரு குற்றச்சாட்டு இதுக்கெல்லாம் பதில் சொல்வதெல்லாம் தேவையில்லாத வேலை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...