ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றிய திருமூர்த்தி-சாந்தி தம்பதியினரிடமிருந்து 21 லட்சம் ரூபாயை வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வந்த திருமூர்த்தி-சாந்தி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களாக எலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு சேர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏலச்சீட்டை நிறுத்துவதாகவும் தங்களால் நடத்த முடியவில்லை எனவும் தங்கள் கட்டிய பணத்தை வீட்டை விற்று ராம் லட்சுமி என்ற வழக்கறிஞர் மூலம் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீடு விற்ற பணத்திலிருந்து ராம் லட்சுமி ஆபிஸில் வைத்து 17 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதாகவும், மேலும் 26 பேருக்கு 21 லட்சம் ரூபாய் வரை தரவேண்டிய நிலையில் பணம் தர முடியாது என தெரிவிப்பதாகவும் இது குறித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கி தர வேண்டும் என அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...