கோவையில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அறிவிப்பு

கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கோவை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, சென்னையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று (மார்ச்.11) முதல் வரும் வெள்ளிக்கிழமை (15ம் தேதி) வரை வெப்பம் 35 டிகிரி வரை பதிவாகும் என்றும், சனிக்கிழமை 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 38 டிகிரி வரை பதிவாகுமென்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பம் 39 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 34 டிகிரி வரை பதிவாகும் என்றும், வெள்ளி, சனிக்கிழமையன்று 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...