காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.
அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.
அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.