காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

காலவதியான சுங்கசாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் வாகன இன்சூரன்ஸ் உயர்வு, வட்டார போக்குவரத்தக் கழக அலுவலகங்களில் கட்டண உயர்வு, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கதினர் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் ஓடாது எனவும், இதனால் நாள் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைபடாது என தெரிவித்தனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என கூறினர்.

அதேபோல் தொழிற்துறையினர், வியாபாரிகள், எளிய ரக வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...