போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கிணத்துக்கடவு பகுதியில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளாருமான செ.தாமோதரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கைகளை கோர்த்து படி மனித சங்கிலியாக நின்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதில் கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் மூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் சிங் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...