உடுமலை அருகே பாலப்பம்பட்டியில் பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு -காவல்துறை விசாரணை

குளிர்பானம் கேட்பது போல் நடித்து பெட்ரோல் பங்கில் கல்லாப் பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற இரண்டு பேரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பாலப்பம்பட்டி அருகே உடுமலை-பழனி நெடுஞ்சாலையை ஒட்டியவாறு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இங்கு பெட்ரோலுடன் குளிர்பானம் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடிப்பதற்காக இரண்டு ஆசாமிகள் வந்து உள்ளனர். பெட்ரோல் அடித்த பின்பு பணத்தை கொடுத்து விட்டு தாகமாக உள்ளதாகவும், அதனால் குளிர்பானம் கேட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து பணியாளர் குளிர்பானத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டு பணத்தைப் பெற்று கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் செல்போன் மூலம் உரிமையாளருக்கு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உரிமையாளர் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர்கள் எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாலப்பம்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...