பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89க்குட்பட்ட பி.என்.டி.காலனி சமீம் கார்டன் மற்றும் ஜூடிசில் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ..20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.



தொடர்ந்து, வார்டு எண்.89க்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங்யூனிட் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச்சாலை அமைப்பது குறித்தும் மற்றும் வார்டு எண்.100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்தும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் எஸ்.எஸ்.கார்டன் முதல் செந்தமிழ் நகர் வரை பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் மஞ்சிப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் துவக்கி வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பாபு, செந்தில்குமார், முருகேசன், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, சக்திவேல், நாசர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...