விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இளைஞர்கள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!



டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில்  போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். 



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீரென திரண்ட இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இளைஞர்கள் பேசுகையில், 'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் வெளியே வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. 



ஜல்லிக்கட்டு போராட்டத்தை வென்றெடுத்தது போல், இந்த போராட்டத்திலும் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்' என்றனர்.

 முன்னதாக இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வஉசி மைதானத்தில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறையினர் வஉசி மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக தெரிவித்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அவ்வாறு வஉசி மைதானத்தில் எவ்வித தடைஉத்தரவும் அமல்படுத்தவில்லை. அதனால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் திரண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்" என்றனர்.



தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் . 



தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...