நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து சங்கு ஊதி போராட்டம் நடத்த சாலை பணியாளர் முடிவு


தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தமிழக அரசு தனியாருக்கு வழங்கி இருப்பதைக் கண்டித்து நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்துவது என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அம்சராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக நெடுஞ்சாலையை பராமரிக்கும் பணியை மாவட்டம் தோறும் தமிழக அரசு தனியாருக்கு வழங்கி வருவதாகவும் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுக்கி உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருக்கும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அம்சராஜ் தெரிவித்தார்.

மேலும் 2002-ம் ஆண்டு 10000 சாலை பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அம்சராஜ் தெரிவித்தார்.

ஏப்ரல் 22-ம் தேதி சாலை பணியாளர் சங்க மாநில பிரதிநிதித்துவ கூட்டத்தினை கோவையில் நடத்துவது எனவும். ஏப்ரல் 25-ம் தேதி அரசு ஊழியர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சாலை பணியாளர்களும் கலந்து கொள்வது எனவும் இன்று நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்சராஜ் தெரிவித்தார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...