கோவையில் சப்வே பணியை விரைவுப்படுத்தக்கோரி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து சி.பி.எம். கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம்

சப்வே கட்டுமான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாலா நகர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் நகர்புறத்திற்கு செல்ல வேண்டுமானால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை: கோவை 29 வது வார்டு, பாலா நகர் பகுதியில், 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நகர்ப்புறத்திற்கான இலகுவான சாலை போக்குவரத்து பயணத்துக்காக, செக்கான் தோட்டம் சாலைகள் வழியாக செல்வார்கள். இந்த நிலையிலே செக்கான் தோட்டம், பாலன் நகர் குடியிருப்பு பகுதிகள் வழியாக ரயில்வே தண்டவாளம் செல்வதனால், இந்த பகுதியில் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி சென்று, மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றன.

இதனை கோரிக்கையாக வைத்திருந்த நிலையில், சப்வே அமைக்க வலியுறுத்தி, இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தனர். இந்தப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இதனால் இந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நகர்புறத்திற்கு செல்ல வேண்டுமானால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

அவசர காலகட்டங்களில் ஆம்புலன்ஸ் கூட விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதனால், உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக குமுறும் இப்பதி மக்கள், இந்த பால வேலையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை காவல்துறை பேசி சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில் சப்வே பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், அதனை உடனடியாக ஆரம்பித்து, போக்குவரத்து வசதிக்காக கட்டி முடித்து தர வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஒன்றிய பாஜக அரசாங்கம் தென்னக சேலம் ரயில்வே கோட்டமும் உடனடியாக கோரிக்கைக்கு செவி சாய்த்து பணிகளை முடித்து தர வேண்டும் என தெரிவித்தார்கள். தாமதமானால் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோமென தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...