கோவை லங்கா கார்னர் பகுதியில் பச்சை துணி மூலம் போஸ்டர் ஒட்டும் இடங்கள் மறைப்பு

கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாக கூறி போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் மறைத்து வைத்துள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகளில் போஸ்டர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்சிகள் போஸ்டர் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புகளையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரைப் பொறுத்தவரை லங்கா கார்னர், நஞ்சப்பா சாலை, கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக லங்கா கார்னர் பகுதி என்பது ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் செல்லும் பகுதியின் முக்கிய சந்திப்பு என்பதால் இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் பார்வைக்கு எளிதில் சென்றடையும்.

இந்நிலையில் இன்று (மார்ச்.14) மாநகராட்சியினர், லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாகவும், இதனால் போஸ்டர்கள் ஒட்ட மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. பின்னர் போஸ்டர்கள் ஒட்டும் சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.இந்நிலையில் தற்போது இப்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால் இங்கும் ஏதேனும் கலை ஓவியங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...