மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசிய குஷ்புவை கண்டித்து உடுமலையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமை தொகை குறித்து பேசி பெண்களை நடிகை குஷ்பு அவமதித்துவிட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மகளிர் உரிமை தொகை குறித்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி குஷ்புவை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதைத் தொடர்ந்து மகளிர் அணியினர் குஷ்புவை கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன், மத்திய அரசை கண்டித்தும் பேசினார்கள்.

இறுதியாக குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீ வைத்தும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி, துணைச் செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...