கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு - நீநிமன்றத்தில் பாஜக வழக்கு

பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 18-ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மற்றும் அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியிருந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொதுத்தேர்வு மற்றும் இதுவரை கோவையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கியத்தில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஐஜி லவ் குமார் தலைமையிலான எஸ்.பி.ஜி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.



சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவை இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

இதனையடுத்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலான பாஜகவினர் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குபிறகு இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறி சென்றார்.

இதனிடையே பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...