12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பல்லு குஷ்வா(21) என்ற வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்லு குஷ்வா(21) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று (14. 03. 2024) ஆம் தேதி பல்லு குஷ்வாக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் மேற்கொண்ட விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தலைமை காவலர் சுதா ராணி ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.
இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று (14. 03. 2024) ஆம் தேதி பல்லு குஷ்வாக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் மேற்கொண்ட விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தலைமை காவலர் சுதா ராணி ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.