பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் உலாவும் காட்டெருமை – கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை

இன்று காலையில் டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் பாதிவழியிலேயே நிற்க நேரிட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் கடக்க முடியாமல் நின்றது. இதனால் இவ்வழியாக பயணிக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்குவோ செல்பி எடுக்கவோ அருகில் சென்று தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் கவனமாக வன பாதையை கடக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...