கோவை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் மார்ச் 31-ல் தொடக்கம்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவையும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகின்றன. முன்பு கோவையில் இருந்து முதல் விமானம் காலை 6 மணியளவிலும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணியளவிலும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து முதல் விமானம் சென்னைக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து இரவு 6.50 மணிக்கு கோவைக்கு கடைசி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்ப முடியாமல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31-ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவை -சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவை கிடைக்கும். அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கு வழங்கப்படும். இந்த விமான சேவை பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

தொழில்துறையினர் கூறும் போது, கோவை- சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய சேவைகளால் சென்னைக்கு ஒரு நாள் பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அன்றைய தினமே கோவை திரும்ப பெரிதும் உதவும். அதே போல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மாலை இரவு 8 மணியளவில் வந்து அங்கிருந்து கோவைக்கு வர விரும்பும் பயணிகளுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனளிக்கும் என்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...