துடியலூர் அருகே சாலையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசால தூளால் வாகன ஓட்டிகள் அவதி

பன்னிமடை பிரிவு பகுதியில் கணுவாய் செல்லும் சாலையில் சிலர் காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசாலா பாக்கெட்டுகளை கொட்டிச் சென்றுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை பிரிவு பகுதியில் கணுவாய் செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரங்களில் குப்பைகள் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தில் குப்பை கொட்டாதீர்கள் என்று பன்னிமடை ஊராட்சி சார்பில் போர்டு வைத்தும் பயனில்லாமல் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினரும் அதனை அகற்றாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிலர் அங்கு காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசாலா பாக்கெட்டுகளை கொட்டிச் சென்றுள்ளனர். அவைகள் சாலைகளில் பரவி அதன் மீது வாகனங்கள் ஏறி செல்லும் போது பாக்கெட்டுகள் உடைந்து சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன் ஓட்டிகளில் கண்களில் பட்டு கடும் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதி பன்னிமடை ஊராட்ட்சி மற்றும் மாநாகராட்சி 1 வது வார்டின் எல்லைப் பகுதியில் வருவதால் இரு நிர்வாகத்தினரும் குப்பைகளை எடுக்காமல் உள்ளனர்.

அதேபோல் அந்த குப்பைகளை தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் வாசல்களுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டு அசிங்கம் பண்ணுவதோடு துர்நாற்றம் வீசுவதால் இங்கு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வாகனத்தில் செல்பவர்கள் கண்ணில் மிளகாய் தூள் பறந்து வந்து படுவதால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . இது நாள் வரை இந்த பகுதியில் இப்படி ஒரு நிலை இருந்ததில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். உடனடியாக சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகமோ அல்லது கோவை மாநகராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் மாவட்டம் சாலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...