உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீர் மோர் வழங்கும் பணி துவக்கம்

கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா என ஒருங்கிணைந்த தலமான இங்குள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும், மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.



இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கமான காலத்திற்கு முன்பாகவே தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பஞ்சலிங்க அருவியை நாடி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. அதன்படி திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், தேவராஜ், பானுரேகா, ராஜபாலன், கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள். இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டமானது கோடை காலம் முடியும் வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...