உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீர் மோர் வழங்கும் பணி துவக்கம்

கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா என ஒருங்கிணைந்த தலமான இங்குள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும், மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.



இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கமான காலத்திற்கு முன்பாகவே தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பஞ்சலிங்க அருவியை நாடி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. அதன்படி திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், தேவராஜ், பானுரேகா, ராஜபாலன், கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள். இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டமானது கோடை காலம் முடியும் வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...