திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பறக்கும் படை C பிரிவு வாகனம் அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா தலைமையில், உதவி ஆய்வாளர் பழனியம்மாள், தலைமை காவலர் துரைபாபு, காவலர்கள் ஐதீஷ், பொன்ரகுராஜன் ஆகியோர் கொண்ட குழு சோதனைக்காக திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் இருக்கும் கிருஷ்ணா பேக்கரி அருகே அதிகாலை முதல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இங்கு தனியார் சொகுசு பேருந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் இடமான அந்த பகுதியில், சென்னையில் இருந்து கோவை வந்த A1 Travels சொகுசு பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டும், செல்போன் உபயோகித்துக் கொண்டும் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொடனர். மேலும் அவரது பைகளை சோதனை செய்ததில் கருப்பு கலர் கேரிபேக் பையில் பணத்தை கட்டி தனது பேக்கில் வைத்திருப்பது தெரியவந்தது.



இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மதுரை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்பதும், அவரது பையில், உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் பண்டல் 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் (25) என்ற இளைஞர் ரஹ்மத்துல்லாஹ்வை அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் வந்துள்ளார்.அவரும் பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவே, உடனடியாக பறக்கும் படையினர் 14.94 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...