திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பறக்கும் படை C பிரிவு வாகனம் அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா தலைமையில், உதவி ஆய்வாளர் பழனியம்மாள், தலைமை காவலர் துரைபாபு, காவலர்கள் ஐதீஷ், பொன்ரகுராஜன் ஆகியோர் கொண்ட குழு சோதனைக்காக திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் இருக்கும் கிருஷ்ணா பேக்கரி அருகே அதிகாலை முதல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இங்கு தனியார் சொகுசு பேருந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் இடமான அந்த பகுதியில், சென்னையில் இருந்து கோவை வந்த A1 Travels சொகுசு பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டும், செல்போன் உபயோகித்துக் கொண்டும் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொடனர். மேலும் அவரது பைகளை சோதனை செய்ததில் கருப்பு கலர் கேரிபேக் பையில் பணத்தை கட்டி தனது பேக்கில் வைத்திருப்பது தெரியவந்தது.



இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மதுரை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்பதும், அவரது பையில், உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் பண்டல் 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் (25) என்ற இளைஞர் ரஹ்மத்துல்லாஹ்வை அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் வந்துள்ளார்.அவரும் பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவே, உடனடியாக பறக்கும் படையினர் 14.94 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...