உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவர்கள் நான்கு பேரை மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் அழைத்துச் சென்றார்.


கோவை: கோவை பீளமேடு அருகே மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் திக்ஷன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகியோர் 2023 - 2024 கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்று, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த மாணவா்கள் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவா். மசக்காளிபாளையம் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்த தோ்வுகளில் யாரும் தோ்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 2023 - 2024ஆம் கல்வியாண்டில் இந்தத் தோ்வில் தோ்ச்சியடையும் மாணவா்களை, விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் க.மைதிலி மாணவா்களிடையே உறுதி அளித்திருந்தார்.



அதன்படி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வில் தோ்ச்சி பெற்ற திக்சன்யா, காவியா, ஆகாஷ், மிர்ஜன் ஆதித்யா ஆகிய நான்கு போ் மற்றும் இந்தத் தோ்வுக்கு பயிற்சியளித்த ஆசிரியைகள் சுகுணா, மேரி திவ்யா ஆகியோரையும் மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் கோவையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தலைமை ஆசிரியா் க.மைதிலி (மார்ச்.18) அழைத்துச் சென்றார்.

இதில், கோவை சக்தி பல் மருத்துவமனை மருத்துவா் அசோக்குமார், ஒரு மாணவரின் விமானப் பயணச்செலவை ஏற்றுக் கொண்டார். விமானத்தில் பெங்களூா் அழைத்துச் செல்லப்பட்ட மாணவா்கள், விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், கா்நாடக சட்டப்பேரவை, திப்புசுல்தான் கோட்டை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு பின்னா் பேருந்தில் புறப்பட்டு நேற்று (மார்ச்.19) கோவை வந்தடைந்தனா்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...