காங்கேயம் அருகே கோயக்காடு கருப்பண்ணசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா

இன்று காலை மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்கோயில் வலம் வந்து கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் அருகே உள்ள அத்தான் வலசு மற்றும் குட்டறை பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கன்னிமார் கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோயில் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு திருவிழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக 18ம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை உடன் கணபதி பூஜை, கணபதி யாகம் நடைபெற்றது. அன்று மாலை முளைபாலி பூஜை, திருகாப்புக்கட்டுதல், முதற்காலயாக பூஜை நடைபெற்றது. இதை அடுத்து 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம், புதிய மூர்த்தி கோபுர கலசம் அபிஷேகம், மண்டல அர்ச்சனை, வேதிகை பூஜை, துவார பூஜை, யாகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

அன்று மாலை விஷேசந்தி புண்யாக வாஜனம் திருக்கோவில் கோபுரம் கண் திறப்பு, கருவறை தீபம் ஏற்றுதல், பாவனா அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜை கோபுர கலசம் வைத்தல், திரவ்யாகுதி பூர்ண குதி பூஜை தொடர்ந்து புதிய மூர்த்தி சிலையை கருவறையில் நிலைநாட்டுதல் யாந்திரஸ் தாபனம் என் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 20ம் தேதி இன்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம் புதிய மூர்த்தி சிலைகளுக்கு திருகாப்பு கட்டுதல், நாடிசந்தனம், உயிர் சக்தி கொடுத்தல், யாகம் நிறைவு, தீபாராதனை யாத்திர தானம் கலசம் புறப்பாடு திருக்கோயில் வலம் வந்து கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமி பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை சிவசாமி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அத்தான்வலசு மற்றும் குட்டறை ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்களும், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...