பாஜக எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் முத்துசாமி

திமுக வெற்றி பெற்றால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும் எனவும் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் முதல்வரின் கருத்துக்கு எதிர்த்தரப்பினருக்கு பயம் வந்ததாகவும், பயம் இருப்பதால் தான் நம் ஊரையே சுற்றி சுற்றி வருவதாகவும், எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், நாம் தான் 40லும் வெற்றி பெறுவோம் என பிரதமரின் வருகையை சூசகமாக குறிப்பிட்டு அமைச்சர் முத்துசாமி விமர்சித்தார். 

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹால் வளாகத்தில் கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் கல்பனா, கோவை மக்களவை தொகுதி சிபிஎம் எம்.பி., நடராஜன் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது குறித்த கருத்துரை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் ராஜா உயரத்திற்கு கோவை மக்களவை தொகுதியின் வெற்றி இருக்கும். வேட்பாளருக்கு வெறுமனே கும்பிடு மட்டும் தான் போடுவார்கள் என நினைத்தேன், ஆனால், கூட்டணி தலைவர்கள் இணைந்து கையை உயர்த்தியது வெற்றியை உறுதி அளித்தது; குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தால் தான் வெற்றியை தரும், மக்களை தினந்தோறும் சந்தித்து 5 நிமிடங்கள் பார்த்தால் தான் வெற்றியை கொடுக்கும், செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்தார், இன்றும் அவர் கோவையை பற்றி நினைத்து வருவார், இன்றும் அவரது பணியை நாம் செய்ய வேண்டும், வீடு வீடாக தாய்மார்களை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது, அந்த வாக்கு நமக்கு கிடைக்காது என்றால் 5 முறையாவது மீண்டும் மீண்டும் சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும். 

பாஜக வேட்பாளர் அண்ணாமலை என்று அறிவித்துள்ளார்கள், திமுக உட்பட கூட்டணி தொண்டர்கள் மீறி எதையும் செய்ய முடியாது என என்னால் நிச்சயமாக உணர முடிகிறது; 12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வருகிற 12ம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் நாம் தவற விட்டிருக்கலாம். ஆனால், முதல் நிகழ்ச்சி என்பது வாக்களிக்காதவர்கள் என யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு நான் உழைக்க நினைக்கிறேன் என கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் முதல் கூட்டத்தை கோவையில் முதல்வர் நடத்தினார்.

திமுக வெற்றி பெற்றால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும். எல்லாரும் அவர்களுக்கானது கோவை மண்டலம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் திமுகவிற்கு முதல் வெற்றி கோவையிலிருந்து வர முடியும் என நம்புகிறேன் என்றார். 

முன்னதாக பேசிய கோவை எம். பி., நடராஜன், 10 நாட்களாக பிரதமர் கண்ணில் தேர்தல் தோல்வி பயம் தெரிகிறது. முதல்வர் கூருந்து கவனியுங்கள், நமக்கு தான் தேர்தல் ஆணையம், பிரதமர் இராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார். தவறுகளை பகிரங்கமாக செய்ய துவங்கியுள்ளார். தேர்தல் அச்சம் பயம் கண்ணில் தெரிகிறது. தினமும் ஆட்டோவில் ஏறி போவது போன்று ஹெலிகாப்டரில் செல்கிறார். பாஜக கோவை மக்களவை தொகுதியில் 2004 க்கும் பிறகு பாஜக வெளியே நிற்கிறார். மக்கள் பாடம் புகுட்டியுள்ளனர். மறக்க முடியாத பாடத்தை பிரதமருக்கு தமிழக, கோவை மக்கள் சொல்லி கொடுக்க வேண்டும். மதவெறி சக்திக்கு எந்தவித உத்தரவாதம் வாய்ப்பில்லை என்பதை பாஜகவிற்கு புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...