காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகன் நந்தகுமார் (24). பட்டதாரியான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நந்தகுமாரும், சுஜி என்ற பெண்ணும் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக சுஜி, நந்தகுமாருடன் பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நந்தகுமார் இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நந்தகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகன் நந்தகுமார் (24). பட்டதாரியான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நந்தகுமாரும், சுஜி என்ற பெண்ணும் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக சுஜி, நந்தகுமாருடன் பேச மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நந்தகுமார் இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நந்தகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.