கோவை திமுக கிழக்கு மண்டலம் 52 ஆவது வட்டம் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், எம்.பி வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
கோவை: கோவை திமுக கிழக்கு மண்டலம்52 ஆவது வட்டம் சார்பாக நேற்று (மார்ச் 24) செயல் வீரர்கள் கூட்டம், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள எஸ் கண்ணன் நினைவரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்விவாதித்தனர்.

இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் வட்டச் செயலாளர் நாராயணன், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமி (சிபிஐ), கல்யாணசுந்தரம் (சிபிஎம்), பாண்டியன் (சிபிஎம்), சிவக்குமார் (காங்கிரஸ்), மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் 52 வது வட்டக் கழக செயல் வீரர்கள், பாக முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்விவாதித்தனர்.
இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் வட்டச் செயலாளர் நாராயணன், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமி (சிபிஐ), கல்யாணசுந்தரம் (சிபிஎம்), பாண்டியன் (சிபிஎம்), சிவக்குமார் (காங்கிரஸ்), மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் 52 வது வட்டக் கழக செயல் வீரர்கள், பாக முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.