கோவை திமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் - செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

கோவை திமுக கிழக்கு மண்டலம்  52 ஆவது வட்டம் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், எம்.பி  வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.


கோவை: கோவை திமுக கிழக்கு மண்டலம்52 ஆவது வட்டம் சார்பாக நேற்று (மார்ச் 24) செயல் வீரர்கள் கூட்டம், மசக்காளிபாளையம் சாலையில் உள்ள எஸ் கண்ணன் நினைவரங்கத்தில் நேற்று நடைபெற்றது. 

வரும் பாராளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்திய கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு உண்டான செயல் திட்டம் குறித்து, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள்விவாதித்தனர்.



இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் நோயல் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன் வட்டச் செயலாளர் நாராயணன், தோழமைக் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமி (சிபிஐ), கல்யாணசுந்தரம் (சிபிஎம்), பாண்டியன் (சிபிஎம்), சிவக்குமார் (காங்கிரஸ்), மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி மற்றும் 52 வது வட்டக் கழக செயல் வீரர்கள், பாக முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...