காங்கேயம் அருகே மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

2500க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அருகே உள்ள மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் 2500க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 18ஆம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் தேர், கணபதி தேர், பிரகலநாயகி அம்மன் தேர் என நான்கு தேர் முன்னாள் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஒரு கிலோ மீட்டர் தூரம் கோவிலை சுற்றி தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் 2500 க்கும் அதிகமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை காங்கேயம் காவல்துறையினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...