ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பு மனு தாக்கலுக்குப் பின்பு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேட்டி.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார்.



இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி,

தென்னை விவசாயிகளின் அடிப்படை கொப்பரை விலை கிடைக்கவும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்று பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஆனைமலையில் தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும், தென்னை பயிற்சி மையம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...