10 ரூபாய் நாணயத்தை கடைகள், ஒரு சில அரசு அலுவலகங்களில் வாங்குவது கிடையாது என்பதால் வாங்க வேண்டுமென வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்.
கோவை: வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையைச் சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அளித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார்.
இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில், பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அளித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார்.
இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில், பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.