தாராபுரம் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மின் பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு..!

வேலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தும் தொடர்ச்சியாக வேலை செய்து வரும் தனியார் மின் பாதை நிர்வாகத்தை கண்டித்து நீர் நிலையில் இறங்கி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கன்னாங்கோவில் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடுமையான வறட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் சூரிய ஒளி மின் சக்தி மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் பாதை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் பாதையை சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளிலும் அமைக்க கூடாது என வலியுறுத்தி குண்டடம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

அப்போது, தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் குண்டடம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மனுவை பெற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தினர். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, வருகின்ற ஆறு நாட்களுக்கு பணியை தனியார் மின் பாதை நிறுவனத்தினர் நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.



இதனிடையே, கன்னங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பியபோது, கனரக வாகனங்களை வைத்து மின்பாதை அமைக்கும் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை முடிவதற்குள் மூன்று புதிய மின் கம்பங்களை நீர் நிலைகளின் அருகிலேயே நட்டுச் சென்றனர். அதை தொடர்ந்து சாலை ஓரத்தில் மின் பாதையில் மின்கம்பங்கள் நடுவதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் வேலையாட்களை முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 6 நாட்களுக்கு வேலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தும் தொடர்ச்சியாக வேலை செய்து வரும் தனியார் மின் பாதை நிர்வாகத்தை கண்டித்து நீர் நிலையில் இறங்கி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தற்போது கண்ணாங் கோவில் கிராமத்தில் அனுமதி இல்லாமல் நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் தனியார் மின் பாதை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பொதுமக்களையும் எதிர்ப்பையும் மீறி மின்கம்பம் அமைத்து வருகின்றனர் மேலும் மின் பாதை அமைக்கும் பணி நிறுத்தவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...