கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 52-வது வார்டுக்குட்பட்ட சித்தாபுதூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், தொடர்ந்து, அம்பிகா லே-அவுட்டில் நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் நீர்கசிவு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பின், திருமலைசாமி தெருவில் உள்ள வீடுகளில் காய்கறிக்கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை மாநகராட்சி ஆயைர் மற்றும தனி அலுவலர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சாஸ்திரி நகர் மயானம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தை அவர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், தொடர்ந்து, அம்பிகா லே-அவுட்டில் நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் நீர்கசிவு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பின், திருமலைசாமி தெருவில் உள்ள வீடுகளில் காய்கறிக்கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை மாநகராட்சி ஆயைர் மற்றும தனி அலுவலர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சாஸ்திரி நகர் மயானம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தை அவர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.