வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற  பங்குனி உத்திர திருவிழா..!

கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கிய 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில்,  திருக்கல்யாணம், அன்னதானம், காவடி என பல்வேறு நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

ஒவ்வோரு ஆண்டும், இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாபட்டு வரும் நிலையில்,

கடந்த 21 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் இவ்வாண்டு திருவிழா தொடங்கியது.



தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கொடுமுடி பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களுடன், தேன், தினைமாவு கலந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர், நேற்று 24 ஆம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது,

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வால்பாறை முருக பக்தர்கள் குழுவினரின் சார்பில் நடைபெற்ற சுத்து காவடி, அங்கு, அலகு காவடி மற்றும் பறவைக் காவடியுடன் பால்குடம் மற்றும் தீர்த்தக் குடம் எடுத்து கோவில் சென்றடைந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து இறுதி நாளான இன்று மாபெரும் அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்ற இந்த 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...