கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல்

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவாகரத்தில், பொறுப்பு பதிவாளர்கள் 2 பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதலில்முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பதிவாளர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் வழங்கி உள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், பேராசிரியர்கள் ஆறு பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர், சுயநிதி கல்லூரிகளை சேர்ந்த முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர்கள் இரண்டு பேர் என மொத்தம் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை செயலர் கார்த்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர்கள் இரண்டு பேர், தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காலமாகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் பணிபுரியும் நான்கு பேர் மீது கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...