கோவை அதிமுக வேட்பாளருக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்..!

நஞ்சுண்டாபுரம் பகுதியில், எம் எல் ஏக்கள் -அம்மன் கே.அர்ஜுனன் மற்றும்  கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: நேற்று, மார்ச் 27, வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கோவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும், அவரவர் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கிஇன்று (மார்ச்.28) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பகுதிக் கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகர், உலகநாதன் மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...