கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத்: 16 பேர் விடுதலை...!

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம், சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கோவை: உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நேற்று (மார்ச்.27) கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் இந்த 4 மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சிறை மெகா அதாலத் நீதிமன்றத்தை, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் முன்னிலையில், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் கே.எஸ்.எஸ்.சிவா தொடங்கி வைத்தாா். 

இதில், கோவை மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை கோவை நீதித் துறை நடுவா்கள் சந்தோஷ், சுனில் வினோத் ஆகியோா் மூலம் 18 சிறைவாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை திருப்பூா் நீதித்துறை நடுவா் முருகேசன் மூலம் 3 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டன.

மேலும், சிறை மெகா அதாலத் நிகழ்ச்சியில், மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு 16 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா். மற்ற சிறைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள பிற வழக்குகளின் காரணமாக அவா்கள் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற மெகா அதாலத் நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட நீதிமன்ற வரம்புக்குள்பட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில், பவானி நீதித்துறை நடுவா் பரத்குமாா், நீலகிரி மாவட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில் கோத்தகிரி நீதித் துறை நடுவா் வனிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...